பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் பிக்பாஸ் கமல்ஹாசன் கொடுத்த அதிரடி!

நடிகர் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மறுபக்கம் வரும் ஆகஸ்ட் 10 ல் வெளியாக இருக்கும் விஸ்வரூபம் 2 படத்தி...

நடிகர் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மறுபக்கம் வரும் ஆகஸ்ட் 10 ல் வெளியாக இருக்கும் விஸ்வரூபம் 2 படத்தின் புரமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கிறார்.

இதற்காக அவர் நேற்று சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். இதில் அவர் விஸ்வரூபம் படம் முன்பே எடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இப்படம் வந்துள்ளது.

அரசியலுக்கு வந்திருப்பதால் அந்த சாயம் இருக்கும் என நினைக்க வேண்டாம். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட படம். முன்பு போல எதிர்ப்புகள் இருக்காது என நினைக்கிறேன்.

மதம், தேசம் இவற்றுக்கு நடுவே கடமையை நிறைவேற்ற போராடும் இந்தியனின் கதை இது. என்னிடம் என் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பணம் இருக்கிறது. அதனால் தவறு செய்ய மாட்டேன் என மக்கள் நினைக்கிறார்கள். அதை தக்க வைக்க விரும்புகிறேன்.

கட்சி மூலம் அரசுப்பொறுப்புக்கு வந்தால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன். விஸ்வரூபம் 1 ன் போது நான் இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என சொன்னது அப்போதைய ஆட்சிக்கு கொடுத்த அவமானம் என நினைக்கிறேன். அப்படியாக என்னை என் வேலையை செய்யவிடாமல் தடுத்தார்கள் என கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive