ரஜினிக்கு போய் பின் விஜய் சேதுபதிக்கு தேடி வந்த அதிர்ஷ்டம்!
April 28, 2018நடிகர் விஜய் சேதுபதியின் படங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது. ஏற்கனவே அவர் வருடத்திற்கு 6 படங்களை கொடுத்து வருகிறார். இது போக சில ப...
ஏற்கனவே அவருக்கு ஜுங்கா, 96, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் என படங்கள் தயாராகி வருகிறது. அதே வேளையில் செக்க சிவந்த வானம், ரஜினிகாந்துடன் அடுத்த படம், தெலுங்கில் சயீரா நரசிம்ம ரெட்டி படங்களில் அவர் நடிக்கிறார்.
இந்நிலையில் காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கு கடைசி விவசாயி என பெயர் வைத்திருக்கிறார்கள். விவசாயிகளும் வாழ்க்கையுடன் சிரிப்பும் கலந்திருக்குமாம்.
முதலில் ரஜினிக்கு போய் அவருக்கு நேரமில்லாமல் கடைசியில் விஜய் சேதுபதிக்கு இந்த வாய்ப்பு வந்துள்ளது.
இளைஞரின் காதல் ஆதங்கம் ... அரங்கமே அதிர்ந்த தருணம்
April 28, 2018இன்று காதல் என்ற பெயரில் நிகழும் அநியாயங்கள் அதிகரித்து விட்டன. தான் காதலிக்கும் பெண் தன்னை காதலிக்கவில்லை என்றால் அப்பெண்ணை பலிவாங்கவே துட...
கொலை செய்வது, ஆசிட் வீசுவது என பல குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். பள்ளிப்படிப்பினை முடிக்காத நிலையில் இப்படியொரு காதல் தேவைதானா?.
இங்கு இளைஞர் ஒருவர் காதல் என்ற வார்த்தையினைப் பற்றி மிகத் தெளிவாகவும், அழகாகவும் விவரித்துள்ளார். இதனை கேட்ட அனைவரது ரியாக்ஷனைக் காணொளியில் காணலாம்
சர்ச்சை நடிகை அமலா பாலின் கண்ணீர் பக்கங்கள்! 2 வருடங்களில் உடைந்து நொருங்கிய காதல் திருமணம்..
April 28, 2018சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவ...
பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது. நடிப்புக்காக பல விருதுகளையும் பெற்றார்.
எல்லா வாழ்விலும் சோகமான பக்கங்கள் இருப்பது போலவே.. இவரின் வாழ்விலும் கசந்து போன பக்கங்கள் இருப்பது அனைவரும் அறிந்தது.
‘தெய்வ திருமகள்’ படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்தார்.
2014-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2 வருடங்களில் திருமண வாழ்க்கை கசந்தது. 2016-ல் விவாகரத்து கேட்டு கோர்ட்டை அணுகினார்கள். கடந்த வருடம் அமலாபால் சட்டப்படி இயக்குனர் ஏ.எல்.விஜய்யை பிரிந்தார்.
அதன் பிறகு நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். விவாகரத்து குறித்து அமலாபால், என் வாழ்வில் மீண்டும் நிச்சயமாக திருமணம் இடம் பெறும் என்று குறிப்பிட்டிருந்தார்.
பல சோகங்களை கொண்டிருந்தாலும், சர்ச்சைகளை கடந்து நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.
மணிரத்தினத்திடம் தனது பழைய கதையை கூறிய விஜய் சேதுபதி !
April 27, 2018காற்று வெளியிட படத்துக்கு பிறகு மணிரத்னம் செக்க செவந்த வானம் என்ற புது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி அருண்விஜய...
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில் இன்று செக்க செவந்த வானம் படப்பிடிப்பும் தொடங்கியது. மணிரத்னம் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள காட்சிகளை படமாக்க இருக்கிறார். அதற்காக இன்று காலையே விஜய் சேதுபதி படப்பிடிப்பில் கலந்து கொண்டு தனது பழைய நினைவுகளை மணிரத்தினத்திடம் பகிர்ந்துள்ளார்.
குறிப்பாக முதல்நாள் படப்பிடிப்பின்போது அவரை சந்திக்க காத்திருந்து ஏமாற்றம் அடைந்த பழைய சம்பவத்தை மணிரத்னத்திடம் நினைவு கூர்ந்திருக்கிறார் அதைக்கேட்ட மணிரத்னம் சின்ன புன்முறுவலுடன் நகர்ந்து சென்றாராம் என படப்பிடிப்பில் இருந்தவர்கள் கூறுகின்றனர்
அக்கா, அண்ணி கதாபாத்திர நடிகைக்கு விரைவில் கெட்டிமேளம் கொட்ட..டும்...டும்...டும்
April 26, 2018தமிழ் சினிமா உலகில் 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை கவுசல்யா. காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், பி...
காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், பிரயமுடன், சொல்லாமலே, பூவேலி, உன்னுடன் ஏழையின் சிரிப்பில், வானத்தைப்போல, மனதை திருடிவிட்டாய் என பல படங்களில் நடித்துள்ளார்.
அவர் தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். பெங்களூருவை சேர்ந்த தற்போது கவுசல்யாவுக்கு 38 வயது ஆகிறது. இதனால் அக்காள், அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார்.
இதுநாள் வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தார். மலையாள படப்பிடிப்பில் கலந்து கொள்ள கேரளா சென்ற கவுசல்யா விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது,
“நான் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளேன். என் மனதுக்கு பிடித்த ஒருவரை மணக்க இருக்கிறேன். எனது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்க்க தொடங்கி உள்ளனர். விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறியுள்ளார்.
உடல் எடையை மிக வேகமாக குறைக்க இந்த ஒரு பொருள் போதும்! தினமும் சாப்பிடுங்கள்
April 26, 2018இன்றைய பரபரப்பான உலகத்தில் நாம் செய்யும் பல்வேறு வேலைகளுக்கு நேரம் என்பதே போதுமானதாக இருப்பதில்லை. இந்த களேபரத்தில் நாம் சரியான உணவை, சரி...
இந்த களேபரத்தில் நாம் சரியான உணவை, சரியான நேரத்தில் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை.
எதிலும் வேகத்தை எதிர்ப்பார்க்கும் நாம் உணவையும் வேகமாக எதிர்ப்பார்க்க ஆரம்பித்து விட்டோம். அப்படி தலைத்தூக்கியது தான் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம். ஆனால் அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றி நம்மில் பல பேர் இன்று உணர்ந்து கொண்டோம்.
அதற்கான மாற்றாக நமக்கு கிடைத்தது தான் ஓட்ஸ். துரிதமாக உண்ண வேண்டுமானால் இதனை தாராளமாக தேர்ந்தெடுக்கலாம். நொடிப்பொழுதில் தயார் செய்து சாப்பிட்டு விடவும் செய்யலாம்.
ஓட்ஸ் என்பது உங்கள் உடல் நலத்தை மேம்படுத்தும் மிகச்சிறந்த முழு தானிய காலை உணவாக விளங்குகிறது. இந்த தானியத்தில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் வளமையாக நிறைந்துள்ளது.
மேலும் உங்கள் உடல்நலத்திற்கு தேவையான சக்தி வாய்ந்த ஃபைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளது.
ஓட்ஸ் உணவால் கிடைக்கும் உடல்நல பயன்களை ஊக்குவிக்க நட்ஸ், பழங்கள் அல்லது மசாலாக்களை அதில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்த்துக் கொள்ளாதீர்கள்.
ஒரு பௌல் ஓட்ஸில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைய உதவியாக இருக்கும். எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது மிகவும் சிறப்பான ஓர் உணவுப் பொருள்.