ஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும் திட்டம் அறிமுகம்.!
January 02, 2019ஏர்டெல் நிறுவனம், அதன் போட்டியாளர்களை எதிர்க்கும் மிகப்பெரிய முயற்சியொன்றில் களமிறங்கியுள்ளது. இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமென...
ஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும் திட்டம்.!
அதிக அளவிலான தரவு நுகர்வு கொண்ட பயனர்களை இலக்காகக் கொண்டுள்ள இந்த திட்டமானது மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும். ப்ரீபெயிட் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த புதிய திட்டத்தின் விலை மற்றும் இதர நன்மைகளை பொறுத்தமட்டில்..
கிட்டத்தட்ட 1 ஆண்டு காலம்.!
மொத்தம் 360ஜிபி அளவிலான டேட்டாவுடன் வர்மபற்ற இலவச குரல் அழைப்பு நன்மைகளும் இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 360 நாட்கள் ஆகும், கிட்டத்தட்ட 1 ஆண்டு காலம்.!
ஒரே நாளில் கூட பயன்படுத்திக்கொள்ளலாம்.!
இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் தரவைப் பயன்படுத்துவதில் எந்த விதமான தினசரி வரம்பும் இல்லை என்பதால் மொத்த 360 ஜிபி டேட்டாவை நீங்கள் ஒரே நாளில் கூட பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது 360 நாட்களுக்குள் அதைப் பயன்படுத்தலாம். ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய திட்டமானது ரூ.3,999/- ஆகும்.
மாதம் ரூ.334/-என்ற செலவில் 25ஜிபி.!
ஒரு சிறிய கணக்கு போட்டுப்பார்த்தால் இது ஒரு மோசமான திட்டம் அல்ல என்பதை நீங்களே உணர்வீர்கள். வருடம் ரூ.3,999/- என்றால் மாதம் ரூ.334/-என்ற செலவில் 25ஜிபி அவளிவான 4ஜி டேட்டா பெறுவீர்கள்வ உடன் வழக்கமான வரம்பற்ற குரல் அழைப்புகளையும், எஸ்எம்எஸ்களையும் பெறலாம்.
சமீபத்தில் திருத்தப்பட்ட ரூ.349/- திட்டம்.!
மாதந்தோறும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரீசார்ஜ்களை நிகழ்த்துவதற்கு ஏர்டெல் நிறுவனத்தின் இந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பதொன்றும் அவ்வளவு பெரிய முட்டாள்தனமான முடிவாக இருக்காது என்றே நம்புகிறோம். ஒரு ஆண்டு செல்லுபடியாகும் ரீசார்ஜ் செய்ய விருப்பமில்லை மாதந்தோறுமே ரீசார்ஜ் செய்ய விருப்பம்ஏ என்பவர்கள் சமீபத்தில் திருத்தப்பட்ட ரூ.349/- திட்டத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
நாள் ஒன்றிருக்கு 1.5ஜிபி.!
தற்போது கிடைக்கும் ஏர்டெல் ரூ.349/- பேக் ஆனது முன்பு போலல்லாமல், இப்பொழுது 1.5ஜிபி அளவிலான டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளை நாள் ஒன்றிருக்கு வழங்குகிறது. கிட்டத்தட்ட ரூ.3,999/- திட்டத்தின் மாதாந்திர செலவு கணக்கோடு ஒற்றுப்போகும் இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது தான் ஒரே வித்தியாசம்.
ரூ.349/- திட்டத்திற்கு எதிரான திட்டங்கள்.?
மற்றபடி, விலை மற்றும் நன்மைகள் ஆகியவைகளில் இரண்டு திட்டங்களும் சரிக்கு சமமாக இதர நிறுவனங்களை விட அதிகமாகவே வழங்குகிறது. இருப்பினும் கூட அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349/- திட்டத்திற்கு எதிரான ஒரு சில திட்டங்கள் உள்ளன.
மொத்தம் 49ஜிபி அளவிலான டேட்டா.!
குறிப்பாக அதன் ரூ.309/- திட்டத்தை கூறலாம். 49 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டமானது இலவச வரம்பற்ற அழைப்புகள் (உள்ளூர் மற்றும் எஸ்டிடி) மற்றும் நாள் ஒன்றிக்கு 1 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது. 1ஜிபி வரம்பை அடைந்த பிறகு இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
மொத்தம் 70ஜிபி அளவிலான டேட்டா.!
ரிலைன்ஸ் ஜியோவின் மற்றொரு திட்டமான ரூ.399/- பேக்கும் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349/-கு போட்டியான ஒரு திட்டம்தான். இது 70 நாட்கள் செல்லுபடியாகும். அதாவது நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா என மொத்தம் 70ஜிபி அளவிலான டேட்டாவுடன் வரம்பற்ற எஸ்எம்எஸ் மற்றும் பிற பிரீமியம் ஜியோ பயன்பாடுகள் மற்றும் சேவைகளையும் அணுக வழிவகுக்கும்.
இந்தியன் 2 படத்தை அடுத்து மாஸ் கூட்டணி அமைக்கும் ஷங்கர்: ஹீரோ யார் தெரியுமா?
January 02, 2019இந்தியன் 2 படத்தை முடித்த பிறகு மாஸ் கூட்டணி அமைக்கப் போகிறாராம் இயக்குனர் ஷங்கர். 2.0 படத்தை அடுத்து ஷங்கர் கமல் ஹாஸனை வைத்து இந்தியன் 2 ப...
2.0 படத்தை அடுத்து ஷங்கர் கமல் ஹாஸனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு இந்த மாதம் துவங்க உள்ளது. செட் போடும் பணியால் படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ளது.
இந்நிலையில் அடுத்த படம் குறித்த வேலையிலும் இறங்கியுள்ளாராம் ஷங்கர்.
புதுப்படம்
இந்தியன் 2 படத்தை முடித்த பிறகு சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர். அந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனை ஹீரோவாக நடிக்க வைக்க விரும்புகிறார் ஷங்கர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ரித்திக்
சயின்ஸ் ஃபிக்ஷன் படம் தொடர்பாக ஷங்கர் தற்போது ரித்திக் ரோஷனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். ஷங்கர் சொன்ன கதை ரித்திக்கிற்கு மிகவும் பிடித்துள்ளதாம். இருப்பினும் ஒப்பந்தம் எதிலும் ரித்திக்கிடம் ஷங்கர் இன்னும் கையெழுத்து வாங்கவில்லையாம்.
வில்லன்
2.0 படத்தில் பக்ஷி ராஜனாக நடிக்குமாறு ஷங்கர் முதலில் ரித்திக் ரோஷனிடம் கேட்டாராம். அவரால் நடிக்க முடியாமல் போகவே அந்த கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்தாராம். தன்னால் நடிக்க முடியாமல் போனாலும் 2.0 படத்தை பாராட்டி ட்வீட் போட்டார் ரித்திக் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன்
இந்தியன் 2 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் துவங்க உள்ளது. அதன் பிறகு படக்குழு உக்ரைன் செல்கிறது. ஷங்கருக்கு 3.0 எடுக்கும் திட்டமும் உள்ளது. ஆனால் ரஜினி நடித்தால் மட்டுமே 3.0 படத்தை எடுப்பாராம்.
கோலிவுட்டில் கால் பதிக்கும் அம்பானி, முதல் படம் எந்த நடிகருடன் தெரியுமா? பிரமாண்டம் ஆரம்பம்
January 01, 2019அம்பானி பிரதர்ஸ் இந்தியாவில் கால் பதிக்காத இடமே இல்லை போல. தற்போது சினிமாவிலும் கால் பதிக்க ரெடியாகி வருகின்றனர். ஆம், ஏற்கனவே ஒரு சில பாலி...
ஆம், ஏற்கனவே ஒரு சில பாலிவுட் படங்களை தயாரித்து வந்த இவர்கள் தற்போது கோலிவுட்டிலும் கால் பதிக்கவுள்ளனர்.
முகேஷ் அம்பானி ஜியோ ஸ்டுடியோ என்பதை கோலிவுட்டிற்கு கொண்டு வரப்போகிறாராம்.
இந்த தயாரிப்பின் கீழ் முதல் படத்தை சிவகார்த்திகேயன் இணைந்து தயாரிக்கவுள்ளதாக முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் மட்டுமின்றி விஜய் சேதுபதி நடிக்கும் படத்தையும் இந்நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.
மநீம-க்கு இதுதான் முதல் தேர்தல்.. திருவாரூர் தேர்தலில் கமல் போட்டியிடுவாரா? என்ன திட்டம்?
January 01, 2019திருவாரூர் தொகுதியில் நடக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசன் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. திருவா...
திருவாரூர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும்.
ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். இந்த தேர்தலில் எந்த கட்சி சார்பாக யார் களமிறக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
மக்கள் நீதி மய்யம் போட்டியிட வாய்ப்பு
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடந்தால் அதில் பெரும்பாலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று ஏற்கனவே கமல்ஹாசன் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் கமல்ஹாசன் கட்சி தொடங்கிய பின், அவர் சந்திக்க போகும் முதல் தேர்தலாக திருவாரூர் தேர்தல் மாறியுள்ளது. முதல் தேர்தலே மிக முக்கியமான ஒன்றாக ஆகியுள்ளது.
யார் நிறுத்தப்படுவார்கள்
மக்கள் நீதி மய்யம் சார்பில் திருவாரூர் தொகுதியில் யார் நிற்க வைக்கப்படுவார்கள் என்பது தற்போது பெரிய கேள்விக்குறி ஆகியுள்ளது. கு. ஞானசம்பந்தம், சினேகன் உள்ளிட்ட சில பிரபலங்கள் கட்சியில் இருக்கிறார்கள். இதனால் இவர்களில் யாராவது தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடுவார்களா என்ற கேள்வி உருவாகி உள்ளது.
பார்வை
கமல்ஹாசன் ஏற்கனவே டெல்டா தொகுதிகளில் நற்பெயர் பெற்று இருக்கிறார். கஜா புயலின் போது மக்களுக்கு உதவியது. கஜா சேத நிலவரங்களை பார்வையிட்டது, என்று நிறைய நற்பெயர்களை கமல்ஹாசன் பெற்று உள்ளார். மக்கள் நீதி மய்யம் இங்கு போட்டியிடும்பட்சத்தில், கமல்ஹாசன் இன்னும் நேரில் போய் மக்களுடன் மக்களாக உழைக்க வேண்டி இருக்கும்.
கமல்ஹாசன் போட்டி
ஒருவேளை இந்த தொகுதியில் கமல்ஹாசனே மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தனி எம்எல்ஏவாக வெற்றிபெற்று சட்டசபை செல்வாரா என்ற கேள்வி உருவாகி உள்ளது. அப்படி தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அது மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சில சமயம்
சில சமயங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த தேர்தலை புறக்கணிக்கவும் வாய்ப்புள்ளது. கமல்ஹாசனும் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியும் நல்ல நட்பில் இருந்தவர்கள். கருணாநிதி மீது கமலுக்கு நிறைய மரியாதை இருப்பதால், அந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவதை இந்த முறை மட்டும் தவிர்க்க வாய்ப்புள்ளது.
தோட்டத்திலிருந்து எலிகளை விரட்டும் வழிகள்!!!
December 31, 2018நாம் பாடுபட்டு பண்படுத்திய தோட்டங்களுக்கு பூச்சிகள் தான் எதிரிகளாக இருக்கின்றன. தோட்டத்தை பராமரிக்கும் மனிதனுக்கு, அங்கிருக்கும் தாவரங்களின...
மனிதர்களுடன் வசிக்க பழகி விட்டிருக்கும் எலிகள் தான், தோட்டங்களையும் வசிப்பிடமாக கொண்டிருக்கின்றன. இவை அங்கிருக்கும் தானியங்களுக்கு மிகவும் அபாயம் தரும் விஷயங்களாக இருப்பதற்கு காரணம், இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது தான்! ஆம், நம்முடைய தோட்டங்களிலிருந்து எலிகளை முழுமையாக ஒழித்துக் கட்டுவதென்பது நடவாத காரியமாகும். எனினும், தோட்டங்களுக்கு இந்த எலிகள் வந்து செல்வதை, கட்டுப்படுத்த முடியும் என்பது ஆறுதலான சங்கதி.
முதலில், எலிகள் உங்களுடைய தோட்டத்திற்கு வரக்கூடிய நேரங்களில் மிகவும் தனித்தன்மையானவை என்பதால், அந்த நேரங்களைக் கணிப்பது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும். எனினும், தக்காளிகள் அல்லது உருளைக் கிழங்குகளை கடித்து போட்டு விட்டிருப்பதைக் கண்டால், எலிகள் வந்து போயிருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம். சில நேரங்களில், இலைகள் கூட கடித்து விடப்பட்டிருக்கும். நீங்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அடையாளமாக இதைக் கொள்ளலாம். இவ்வாறு எலி வந்து போவதை தெரிந்து கொண்ட பின்னர், அவற்றை விரட்டியடிக்கும் வழிகளில் கவனம் செலுத்தலாம்.
முதலாவதாக, உங்களுடைய வீட்டிலிருந்து தோட்டத்திற்குள் வர எந்தவிதமான ஓட்டைகளும் இல்லாததை உறுதி செய்யுங்கள். இவ்வாறு எலிகள் தோட்டத்திற்கு வர வழி காட்டும் துவாரங்களை அடைத்து விட்டால் முதல் பணி தொடங்கி விட்டது எனலாம்.
அடுத்ததாக, உங்களிடம் செல்லப்பிராணிகள் இருந்தால், அவற்றின் உணவுக் கிண்ணங்களை சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்யுங்கள். ஏனெனில், செல்லப் பிராணிகளுக்கு உணவு வைக்கும் பாத்திரங்களால், எலிகளும் ஈர்க்கப்படுகின்றன. அவை வழக்கமாகவே மோசமான சுகாதாரமுடைய இடங்களுக்கு சென்று வரும் என்பது உண்மை. எனவே, உங்களுடைய தோட்டமும் கூட சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள்.
எட்டிக்காய், கற்பூரம் மற்றும் லாவெண்டர்களை பயன்படுத்துங்கள். இவை பூச்சிகளை மற்றும் எலிகளை விரட்டியடிப்பதில் சிறந்த பங்கு வகிக்கும் பொருட்களாகும். மேலும், அம்மோனியம் பூச்சிக் கொல்லிகளை அருகிலுள்ள கடைகளில் கேட்டு வாங்கி பயன்படுத்துங்கள். அம்மோனியாவின் நெடியை வாங்கிக் கொண்டு எலிகள் அதிக நேரம் இருப்பதில்லை.
இறுதியாக, உங்களுடைய தோட்டத்தில் எலிகளை பிடிக்கும் பொறிகளை அமைத்திடுங்கள். எலிகளை விரட்டுவதில் மிகவும் திறமையான வழிமுறையாக இது இருக்கும். உங்களுடைய தோட்டத்திலிருந்து எலிகளை விரட்டுவதற்கு உதவியாக, கடைகளில் பல்வேறு வகையான எலிப்பொறிகள் விற்கப்பட்டு வருகின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்துங்கள் மற்றும் எலிகளை விரட்டுங்கள்.
எவ்வளவு சுத்தமா வெச்சிருந்தாலும் உங்க வீட்டு மெத்தை நாற்றம் அடிக்குதா? இத ட்ரை பண்ணுங்க
December 31, 2018உங்கள் படுக்கை துர்நாற்றம் வீசுகிறதா? நீங்கள் எப்போதாவது உங்கள் மெத்தையின் கிருமிகளை அழித்திருக்கிறீர்களா? அப்பொழுது நீங்கள் மோசமான வாசனைகள...
எல்லாவற்றிற்கும் மேலாக இவை உங்கள் மெத்தையை புதிதாக்குகிறது மற்றும் மெத்தைக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயனங்கள் இவற்றில் இல்லை.
கட்டில் மெத்தை
உங்கள் மெத்தையிலிருந்து கெட்ட வாசனைகளை நீக்க, நீங்கள் வாசனை திரவியங்கள் அல்லது விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை. சந்தையில் இதற்கான சில தீர்வுகள் இருப்பினும், இயற்கைப் பொருள்களின் மூலமாக வீட்டை சுத்தம் செய்யும் தந்திரங்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
இந்த இயற்கை முறை மாற்றுக்கள் மலிவானவை மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்காது. மேலும், அவை கிருமிகள், பூஞ்சை மற்றும் பிற நுண்ணுயிரிகளை அகற்ற உதவுகிறது.
அவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதால் உங்கள் மெத்தையின் மேற்பரப்பு குறைபாடு மற்றும் ஒவ்வாமைப் பிரச்சனைகள் சரி செய்யப்படுகிறது. கண்ணுக்குத் தெரியாத வியர்வை மற்றும் இறந்த செல்கள் மூலமாக உருவாகும் கறைகளை அகற்றவும் உதவுகிறது. இன்றைக்கே இதை உங்கள் வீட்டு மெத்தையில் முயற்சி செய்து பாருங்கள்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா என்பது மெத்தைகளில் இருந்து மோசமான வாசனைகளை அகற்று உதவும் மிகவும் பயனுள்ள கரிம பொருட்களில் ஒன்றாகும். அதன் deodorant பண்புகள் mold மற்றும் உடல் திரவங்கள் காரணமாக ஏற்படும் மோசமான வாசனைகளை நீக்க உதவுகின்றன.
இது ஒரு இயற்கை சோப்பு போல செயல்படுகிறது, கறை அல்லது எதிர்பாராத சிந்திய திரவங்களை அகற்றுவதில் திறம்படச் செயல்படுகிறது.மெத்தைத் துணியைப் பாதுகாப்பதின் மூலம் அதன் ஆயுளை நீடிக்கச் செய்கிறது. இந்த விஷயத்தில், பேக்கிங் சோடாவின் பண்புகளைக் கூட்டி ஒரு ஆழ்ந்த சுத்திகரிப்புக்காக ஹைட்ரஜன் பெராக்சைடை சேர்க்கலாம்,
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
• ¼ கப் பேக்கிங் சோடா (50 கிராம்)
• 1 கப் 3% ஹைட்ரஜன் பெராக்சைடு (250 மிலி)
• 2 சொட்டு திரவ சோப்
தயாரிப்பு
• பேக்கிங் சோடாவை ஒரு வாளிக்குள் ஊற்றவும். பின்னர், ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்க்கவும்.
• இதை நன்கு கலந்து பின் திரவ சோப்பைச் சேர்க்கவும்.
• நன்கு கலந்த கலவையைப் பெற்ற பிறகு, கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமிக்கவும்.
எப்படி உபயோகிப்பது
• பயன்பாட்டிற்கு முன்னர் இதை நன்கு கலக்கி மெத்தையின் மீது தெளிக்கவும்.
• தெளித்த திரவம் முற்றிலும் வறண்டுபோகும் வரை காத்திருங்கள் . முடிந்தால், மெத்தையை தூய்மையான காற்று கிடைக்கக்கூடிய இடத்தில் வைக்கவும்.
• காய்ந்தவுடன் பேக்கிங் சோடாவின் எச்சத்தை நீக்க ஒரு பிரஷ்ஷைக் கொண்டு துடைக்கவும்.
• குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒருமுறை இதைச் செய்யவும்.
வெள்ளை வினிகர்
வெள்ளை வினிகருக்கு இனிமையான வாசனை இல்லை. இருப்பினும், மெத்தைகளில் இருந்து மோசமான வாசனைகளை சீராக்க சிறந்த வீட்டு வைத்தியம் இதுவே. கூடுதலாக, இது அலர்ஜிக்கு சிறந்த தீர்வு ஏனெனில் அது மெத்தைப் பரப்புகளில் வாழும் பூச்சிகள் மற்றும் பாக்டீரியாக்களை நீக்குகிறது.
இருப்பினும், நீங்கள் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். மிகவும் இனிமையான வாசனைக்கு, இதனுடன் லாவெண்டர் அல்லது எலுமிச்சை அத்தியாவசிய எண்ணெய்களை இணைக்கலாம்
.
தேவையான பொருட்கள்:
• ½ கப் வெள்ளை வினிகர் (125 மிலி)
• 1 கப் சூடான நீர் (250 மிலி)
• அத்தியாவசிய எண்ணெயில் 10 சொட்டுகள்
தயாரிப்பு
• ஒரு கப் சூடான நீரில் வெள்ளை வினிகரை சேர்க்கவும் .
• பின்னர், அத்தியாவசிய எண்ணெயைச் சேர்த்து வரும் கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேர்க்கவும்.
எப்படி உபயோகிப்பது:
• மெத்தை மீது இதைத் தெளிக்கவும் மற்றும் காற்றில் உலரச் செய்யவும்.
• விரும்பத்தகாத வாசனையைக் கவனிக்கும்போதெல்லாம் இதைப் பயன்படுத்தவும்.
குறிப்பு: இந்த தீர்வால் கறையை நீக்க முடியாது. எனவே, உங்கள் மெத்தையை முழுவதுமாக சுத்தம் செய்வதற்கு, நீங்கள் அதை மற்ற தீர்வுகளோடு சேர்த்துக் கொள்ளலாம்.
பேக்கிங் சோடா, லாவெண்டர் எண்ணெய்:
லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய் தேவையற்ற நாற்றங்களை மறைக்க வல்ல ஒரு இயற்கையான காற்று சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இதனால்தான் இதை பேக்கிங் சோடாவுடன் இணைக்கும் போது மோசமான மெத்தையின் வாசனையை எளிதாக நீக்கலாம். மேலும் இந்தக் கரைசல் கிருமி நாசினி மற்றும் பூச்சிகளை அகற்றும் வேலையை சிறப்பாகச் செய்கிறது.
தேவையான பொருட்கள்
• 1 கப் பேக்கிங் சோடா (200 கிராம்)
• 20 சொட்டுகள் லாவெண்டர் எண்ணெய்
தயாரிப்பு
• பேக்கிங் சோடாவை ஒரு கிண்ணத்தில் ஊற்றவும்.
• அடுத்து, லாவெண்டர் எண்ணெயை அதனுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
• இந்த பேஸ்ட் ஈரமாக இருந்தால், ஒரு சில நிமிடங்களுக்கு காயவையுங்கள்.
எப்படி உபயோகிப்பது
• மெத்தை மீது இந்தத் தயாரிப்பை பரப்பவும்
• 10 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு ப்ரெஷ் கொண்டு துடைக்கவும்.
• இறுதியாக vacuum கொண்டு பேக்கிங் சோடாவின் எச்சங்களை நீக்கவும்.
• ஒரு மாதத்திற்கு ஒரு முறை இதை உபயோகிக்கவும்.
பெட்ஷீட்
படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் மெத்தையின் பெட்ஷீட்களை அகற்றிவிட்டு இரண்டு மணி நேரத்திற்கு அதற்கு ஓய்வு கொடுங்கள். என்ன முறைகளை உபயோகித்தாலும் ஈரப்பதமும் வெப்பமும் காரணமாக உருவாகும் கிருமிகளை தடுக்க உங்கள் மெத்தைகளை காற்றோட்டமான இடத்தில் வைப்பது சிறந்தது.
உங்கள் படுக்கை துர்நாற்றம் வீசுகிறதா? நீங்கள் எப்போதாவது உங்கள் மெத்தையின் கிருமிகளை அழித்திருக்கிறீர்களா? அப்பொழுது நீங்கள் மோசமான வாசனைகளைக் கவனித்திருந்தால், உங்கள் மெத்தையை புதியதாக வாசனை வீசச்செய்ய இந்தத் தந்திரங்களைப் பயன்படுத்தவும்.