திருமணம் முடிந்த 15 நிமிடத்தில் டைவர்ஸ்! - அதிர்ச்சி கொடுத்த துபாய் கணவர்

துபாயில் திருமணம் முடிந்த 15 நிமிடத்தில் மனைவியை விவாகரத்து செய்திருக்கிறார் மணமகன். `அனைவர் முன்னிலையில் மாமனார் என்னை அவமதித்துவிட்டார்&#...

துபாயில் திருமணம் முடிந்த 15 நிமிடத்தில் மனைவியை விவாகரத்து செய்திருக்கிறார் மணமகன். `அனைவர் முன்னிலையில் மாமனார் என்னை அவமதித்துவிட்டார்' எனக் காரணம் கூறியிருக்கிறார் மணமகன்.

முடிந்த திருமணம்

துபாய் ஊடகங்கள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,  ` மணமகன் ஒருவர் திருமணம் செய்துகொள்வதற்காக மணமகளை வலைவீசித் தேடியுள்ளார். இந்நிலையில், பெண் ஒருவரைத் தேர்வு செய்த அவர் அப்பெண்ணின் தந்தையிடம் சென்று, ' 18 லட்சம் ரூபாய் தருகிறேன். உங்கள் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள்' எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கையை ஏற்ற அப்பெண்ணின் தந்தை திருமணத்துக்கு முன்னதாக பணத்தை தரும்படி கேட்டுள்ளார்.

இதற்கு மணமகன் சம்மதம் தெரிவிக்கவே, ஒன்பது லட்ச ரூபாயை முன்பணமாகக் கொடுத்துள்ளார். அதன்பின், திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. நண்பர்கள், உறவினர்கள் என அனைவர் முன்னிலையில் இன்று திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த அடுத்த நொடியில், மணமகன் தருவதாகக் கூறிய மீதிப் பணத்தை பெண்ணின் தந்தை கேட்டுள்ளார். இதனால், இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாமனாரின் இந்தச் செயலால் மனமுடைந்த மணமகன், 'அனைவர் முன்னிலையிலும் உனது தந்தை என்னை அவமதித்துவிட்டார். அதனால் உன்னுடன் வாழமுடியாது' எனக் கூறிவிட்டு, `தலாக்' முறைப்படி அப்பெண்ணை விவாகரத்து செய்துள்ளார். 

மேலும் பல...

0 comments

Blog Archive