விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி ஆரம்பம்!

விஜய் சேதுபதி தற்போது ரொம்ப பிசி. அவர் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சில படங்களில் வில்லன், முக்கிய கேரக்டர்கள் கிடை...

விஜய் சேதுபதி தற்போது ரொம்ப பிசி. அவர் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சில படங்களில் வில்லன், முக்கிய கேரக்டர்கள் கிடைத்தாலும் நடித்து வருகிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார் என அண்மையில் முக்கிய தகவல் வெளியானது. அடுத்ததாக அருண் குமார் இயக்கத்தில் மீண்டும் அவர் நடிக்கிறார்.

அவர் விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கியவர். அவரின் திருமணத்தை விஜய் சேதுபதி தான் மதுரையில் நடத்தி வைத்தார். தற்போது படத்தின் ஷூட்டிங் மே 15 முதல் தொடங்கயிருக்கிறதாம்.

இதில் அஞ்சலி ஹீரோயினாக நடிக்கவுள்ளார். தென்காசியில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பை மலேசியாவில் 35 நாட்கள் எடுக்கயிருக்கிறார்களாம். 

மேலும் பல...

0 comments

Blog Archive