கருணாநிதி சமாதிக்கு முதல் முறையாக வந்த மூத்த மகன் மு.க முத்து: கண்ணீருடன் செய்த செயல்

திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், அவரது மூத்த மகன் மு.க.முத்து இன்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் உடல்நலக்குறைவு காரணமாக கா...



திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், அவரது மூத்த மகன் மு.க.முத்து இன்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்

உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கருணாநிதி கடந்த 7-ஆம் திகதி காலமானார்.

கருணாநிதியின் உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே மொத்த குடும்ப உறுப்பினர்களும் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர்.

ஆனால் சிறிது காலமாக உடல் நலம் குன்றியிருந்த கருணாநிதியின் முதல் மனைவியின் மகன் மு.க முத்து மட்டும் சமாதிக்கு வராமல் இருந்தார்.

இந்நிலையில் இன்று காலை மு.க முத்து தனது தந்தை கருணாநிதியின் சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

அவரால் சரியாக நடக்க முடியாததால் சிலர் கைதாங்கலாக முத்துவை அழைத்து வந்தனர்.

அஞ்சலிக்கு பின்னர் சிறிது நேரம் சமாதியை பார்த்து கண்கலங்கியபடியே நின்றார் முத்து.

மேலும் பல...

0 comments

Blog Archive