Dhruv Vikram: கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து: நடிகரின் விக்ரமின் மேனேஜர் பதில்!

துருவ் விக்ரம் கார் விபத்தில் சிக்கியது கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து என்று நடிகர் விக்ரமின் மேனேஜர் விளக்கம் கொடுத்துள்ளார். துருவ் விக்ர...

துருவ் விக்ரம் கார் விபத்தில் சிக்கியது கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து என்று நடிகர் விக்ரமின் மேனேஜர் விளக்கம் கொடுத்துள்ளார்.
துருவ் விக்ரம் கார் விபத்தில் சிக்கியது கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து என்று நடிகர் விக்ரமின் மேனேஜர் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ’சீயான் என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விக்ரம். இவருக்கு துருவ் என்ற மகனும், அக்‌ஷிதா என்ற மகளும் இருக்கின்றனர். விக்ரமின் மகளுக்கும், திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளு பேரனுக்கும் இடையே சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

விக்ரமின் மகன் துருவிற்கு நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் உள்ளது. இந்நிலையில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் துருவ் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ’வர்மா என்று பெயரிடப்பட்டுள்ளது. இதையடுத்து இயக்குநர் சேகர் கம்முலா படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் நடனத்தை மையமாகக் கொண்ட படம் என்று கூறப்படுகிறது.

நடிகர் விக்ரமின் மகன் சென்ற கார் விபத்தில் சிக்கியது!


இந்நிலையில் துருவ் விக்ரம் தனது இரு நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். சென்னை தேனாம்பேட்டை அருகே சென்ற போது, துருவ் விக்ரமின் கார் 3 ஆட்டோக்களின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது. இதில், ஆட்டோக்கள் மற்றும் கார் ஆகியவை சேதமடைந்துள்ளன. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விபத்து குறித்து விக்ரமின் மேனேஜர் கூறுகையில், இது கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து. விபத்தில் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் பல...

0 comments

Blog Archive