நத்தையால் நிறுத்தப்பட்ட 26 புல்லட் ரயில்கள்.. அப்படி என்ன நடந்தது தெரியுமா?.. வியப்பான தகவல்..!

ஜப்பானில் பெரும்பாலும் அதிவேகமாக இயங்ககூடிய புல்லட் ரயில்கள் தான் அதிகம் இயக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட புல்லட் ரயிலையே ஒரு நத்தை நிறுத்திய...

ஜப்பானில் பெரும்பாலும் அதிவேகமாக இயங்ககூடிய புல்லட் ரயில்கள் தான் அதிகம் இயக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட புல்லட் ரயிலையே ஒரு நத்தை நிறுத்தியிருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா?..

ஆம் கடந்த மாதம் 30-ம் திகதி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரயிலில் பயணித்த 12,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல முடியாமல் தவித்துள்ளனர். இரயில் வழித்தடத்திலேயே நின்றதால் அடுத்தடுத்து வரவிருந்த 26 ரயில்களின் சேவையும் முடக்கப்பட்டது.

பின்னர் பழுது சரிசெய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன. அதற்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் நேற்றுதான் ஜப்பான் ரயில் சேவை நிறுவனமான ஜே.ஆர் குஷு( JR Kyushu) அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளது.

இரயில் வழித்தடத்தில் மின்சார பாதிப்பு ஏற்பட்டதற்கு ஏதேனும் கருவி பழுதடைந்திருக்கும் என்றுதான் நினைத்தோம். பழுது பார்த்தபோது கருவிகள் அனைத்தும் சரியான முறையிலேயே இயங்கின. பின் மேலும் ஆராய்ந்ததில் இரயில் பாதையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கான காரணம்;

எலெக்ட்ரானிக் கருவியில் சிக்கியிருந்த இறந்த நத்தை என்பது பின்புதான் தெரிய வந்தது என்று ஜே.ஆர் குஷுரயில்வே நிறுவனம் கூறியுள்ளது. இதுபோன்ற சம்பவம் மிகவும் அரிதானது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற சம்பவம் தொடராமல் கவனிக்கப்படும் என்றும் தெற்கு ஜப்பான் இரயில் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் பல...

0 comments

Blog Archive