6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள்.... உண்மை சம்பவம் எங்கே தெரியுமா?...

பெரும்பாலும் கோயில்கள் ஆன்மீகத்துக்கும் கட்டடக்கலையை பறைசாற்றும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கும். அவற்றில் ஒரு சில வித்தியாசமான அம்சங்களை ...

பெரும்பாலும் கோயில்கள் ஆன்மீகத்துக்கும் கட்டடக்கலையை பறைசாற்றும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கும். அவற்றில் ஒரு சில வித்தியாசமான அம்சங்களை கொண்டதாகவும் இருக்கும்.

பொதுவாகவே கோயில்களுக்கு பக்தர்கள் விரும்பி வேண்டி செல்வார்கள். அதே கோயில் பக்தர்களுக்கு பயத்தை ஊட்டினால், எப்படி இருக்கும்.
ராஜஸ்தானில் உள்ள ஒரு கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடுகின்றனராம். ஏன் எதற்கு என்று தெரிந்துகொள்ளவேண்டுமா தொடர்ந்து படியுங்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கிரடு கோயிலில் தான் வரும் பக்தர்கள் அனைவரும் மாலை நேரங்களில் அலறியடித்துக்கொண்டு ஓட்டம்பிடிக்கின்றனர்.
என்னதான் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பாலும் வறட்சியாக காணப்பட்டாலும், பாலைவனத்துக்கு அருகில் இருக்கும் இந்த கோயிலுக்கு செல்லும் பாதை கான்கிரிட் தளமிட்டு அழகாக்கப்பட்டுள்ளது. அதன் இருபுறமும் வழிநெடுகிலும் பச்சை பசேலென்று செடி மரங்கள் உள்ளன.
காடுகள் நிறைந்த பாலைவனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை நேரங்களில் மிகுந்த பயத்துடனே இந்த கோயில் வழிபடுகின்றனர்.
மாலை நேரங்களில் வழிபடும் பக்தர்கள் இரவு ஆவதற்குள் அதாவது 6 மணிக்குள் இடத்தை காலி செய்துவிடுகின்றனர். தப்பி தவறி கூட 6 மணிக்குமேல் இங்கு தங்குவதில்லை. ஏன் தெரியுமா?
இங்கு இரவு நேரங்களில் தங்குபவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று அந்த அதிர்ச்சியான அதிசயம் நடக்கிறதாம்.
கோயிலில் தங்கக்கூடாது என்று தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு அறிவுறுத்துகின்றனர். மீறி தங்கினால் அவ்வளவுதான். அவர்கள் சிலையாக மாறிவிடுகின்றனர். நம்பமுடியவில்லையா?
உள்ளூர் வாசியிடம் விசாரித்தபோது, பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஊருக்கு ஒரு முனிவர் வந்ததாகவும், அவருக்கு இந்த மக்கள் பிடிக்காததால் அனைவரையும் கல்லாக மாற்றிவிட்டதாகவும் கூறினார். மகாபாரதம் நடைபெற்ற இடம் இப்போ எப்படி இருக்கு தெரியுமா?. அந்த முனிவர் இந்த கோயிலில்தான் தற்போதும் இருக்கிறார் என்கின்றனர் வேறு சிலர்.
இந்த கோயில் ஆயிரம் வருடங்கள் பழமையானது என நம்பப்படுகிறது. பழமைக்கும் கட்டத்துக்கும் பெயர்பெற்ற இந்த கோயில் தற்போது பயத்துக்கும் அமானுஷ்யத்துக்கும் புகழ் பெற்று விளங்குகிறது.
இங்குள்ள சுவர்கள் , தூண்கள் என அனைத்திலும் மனித உருவங்களைக் கொண்ட சிலைகள் உள்ளன. அவை பார்ப்பதற்கு மனிதனாக இருந்து கல்லாக உருமாறியதாகவே தோற்றமளிக்கிறது.
இந்த கோயிலின் கட்டிடக் கலையை ரசிப்பதற்காகவே தினமும் பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். நீங்களும் ராஜஸ்தான் போனா மறக்காம போகவேண்டிய இடம் இந்த கிரடு.. ஆனா... சாயங்காலம் ஆகுறதுக்குள்ள எஸ் ஆகிடுங்க...

மேலும் பல...

0 comments

Blog Archive