ரமணி அம்மாவின் செயலை கண்டு கதறி அழுத டி ஆர் - உணர்ச்சிமிகு சம்பவம் !

தமிழ் திரையுலகில் டி ஆர் ஆக்ரோஷமான, துடிதுடிப்பான திறமைகளை கொண்ட மனிதர். அதே சமயம் பலதடவை உணச்சிவசப்படும் சுபாவம் கொண்டவர், இவர் சமீபத்தி...

தமிழ் திரையுலகில் டி ஆர் ஆக்ரோஷமான, துடிதுடிப்பான திறமைகளை கொண்ட மனிதர். அதே சமயம் பலதடவை உணச்சிவசப்படும் சுபாவம் கொண்டவர்,

இவர் சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப ஷோவில் கலந்துகொண்டு இளம் பாடகர்களுக்கு அவரது கருத்துக்களை பகிர்ந்தார். இந்நிலையில் இன்று ஒளிபரபரப்பாகும் ஷோவில் சரிகமப வின் ராக் ஸ்டார் ரமணி அம்மாவின் செயலை பார்த்து அழுது விட்டார்.

அதாவது ரமணி அம்மா ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று அவர்களை தனது பாடலால் மகிழ்வித்து தன்னால் முடிந்த பணத்தை கொடுத்து நம்பிக்கை வார்த்தைகளை கூறினார். குறிப்பாக 300 நாட்கள் கருவில் சுமந்து வளர்த்து பிறகு அவர்களை முதியோர் இல்லத்தில் அனுப்பாதீர்கள் என்று சொல்லத்தான் அங்கு சென்றேன் என்று கூறினார்.

இதை கேட்ட டி ஆர், மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து உன்னால் முடிந்த பணத்தை கொடுத்த தாயே, நீ தான் இந்த உலகத்தில் பணக்காரி, என் கண்ணீரை உன் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் என்று உணர்ச்சிமிகு கண்ணீரோடு கூறினார்.

மேலும் பல...

0 comments

Blog Archive