தன் மனைவிக்காக எழுதிய பாடல் சினிமா பாடலானது - டி. ஆர் மனைவி பகிர்ந்த ருசிகர தகவல் !

தமிழ் சினிமாவில் பல திறமைகளை கொண்ட ஒரே கலைஞர் டி ராஜேந்தர். இவர் சமீபத்தில் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் கலந்...

தமிழ் சினிமாவில் பல திறமைகளை கொண்ட ஒரே கலைஞர் டி ராஜேந்தர். இவர் சமீபத்தில் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த ஷோவில் அவரை பெருமை படுத்தும்விதமாக அவருக்கே தெரியாமல் தன குடும்ப உறுப்பினர்கள் டி ஆரை பற்றி வீடியோ மூலம் பகிர்ந்தார். இதில் அவரது மனைவி உஷா தனது கணவர் எப்படி பட்டவர் என்பதை பற்றி பேசினார். அவர் பேசுகையில், என் கணவர் கல்யாணம் செய்யறதுக்கு முன்பு நல்லவர் என்பது எனக்கு தெரியும், ஆனால் இவ்வளவு நல்லவர் என்பது எனக்கு தெரியாது. ஒரு பொண்ணை கூட தொடாமல் நடித்த முதல் நடிகர்.

அதுமட்டுமில்லாமல் குடும்பத்தின் மீது அதிக பாசத்தை கொண்டவர். ஒரு மறக்க முடியாத விஷயத்தை பகிர்கிறேன் " 1982 கல்யாணம் ஆகி ஒரு வாரம் தான் இருக்கும், எனக்கு ஒரு டான்ஸ் ஷோக்காக வெளிநாடு சொல்லவேண்டியது இருந்தது, வேறுவழியில்லாமல் அவரை விட்டு பிரிந்து சென்றேன், அந்த காலத்தில் போன் கிடையாது அல்லவா, அவர் எனக்கு பல கடிதம் மூலம் தனது பிரிவை பற்றி எழுதிருந்தார்.

அதில் ஒரு கடிதத்தில் தன்னுடைய வலிகளை ஒரு கவிதையாக எழுதியிருந்தார் அந்த கவிதை " கங்கைக்கரை காற்றே நில்லு ,மங்கைதனி பார்த்த சொல்லு , காற்றே பூங்காற்றே மன்னன் மனம் வாடுது என்று மங்கைதனி தேடுது என்று எழுதியிருந்தார். அதையே ஒரு பாடலாக இசையமைத்து உயிர் உள்ள வரை உஷா படத்தில் வைத்தார் என கணவர் என கூறினார்.

மேலும் பல...

0 comments

Blog Archive