பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?
July 18, 2017பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....? என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களி...
என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.
பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..
நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.
இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..
கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.
வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்.
என் பேரை டேமேஜ் பண்ணிட்டாங்க! பிக் பாஸில் சினேகன்
July 18, 2017பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் இன்று தான் நடத்திவைத்த திருமணங்கள் பற்றி பேசினார். ”2004ல் இருந்து 2011 வரை ஒரு அமைப்பை நடத்தி வந்தேன். அ...
”2004ல் இருந்து 2011 வரை ஒரு அமைப்பை நடத்தி வந்தேன். அதன் மூலம் தாலியே கட்டாமல் திருமணம் நடத்தி வைத்தேன். ஜாதி பார்க்காமல், வேண்டுமென்றே கெட்ட நேரமான இராகு காலத்தில் தான் திருமணம் நடக்கும். இதுபோல 23 திருமணங்கள் நடத்தி வைத்துள்ளேன். அனைவரும் தற்போது வரை சந்தோசமாக தான் உள்ளார்கள்.
"விதவையாக இருந்த பெண்களுக்கும் திருமணம் நடத்தி வைத்தேன். ஆனால் மீடியாக்களில் என் பெயரை டேமேஜ் செய்துவிட்டார்கள். இதை கேட்டால் என்னை பைத்தியக்காரன் என்பார்கள்" என கூறினார் சினேக
'தமிழ் தலைவாஸ்’ பிராண்டு அம்பாசிடரானார் கமல்!
July 18, 2017புரோ கபடி லீக் 5-வது சீஸன் போட்டி வருகிற 28-ம் தேதி முதல் அக்டோபர் 28-ம் தேதி வரை இந்தியாவின் 12 நகரங்களில் நடக்கிறது. இதில் களம் காணும் 12...
கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் 'அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்' என்று ட்விட்டினார். பலரும் அர்த்தம் புரியவில்லை என தொடர்ந்து கமென்ட் செய்தனர்.
அடுத்த ட்விட்டாக, 'புரியாதோர்க்கு ஆங்கிலப் பத்திரிகையில் நாளை வரும் சேதி' எனத் தலைப்பிட்டு ஒரு கவிதையையும் எழுதியிருந்தார். இந்நிலையில்தான் இந்த பிரஸ் ரிலீஸ் வெளியாகியிருக்கிறது. ‘தமிழ் தலைவாஸ்’ பிராண்டு அம்பாசிடர் ஆனதைத்தான் கமல் இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள்.
கருச்சிதைவிற்கு பின்னர் மீண்டும் கர்ப்பம் அடைய வழிகள்..!
July 18, 2017பொதுவாக பெண்கள் கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், உடல் அளவில் மட்டுமின்றி, மனதளவிலும் மிகவும் பலவீனமாகி இருப்பார்கள். * இரண்டாம் முறை கருத்தர...
* இரண்டாம் முறை கருத்தரிக்கும் போது, பெண்கள் சரியான டயட்டை பின்பற்ற வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் உடலானது மிகவும் பலவீனமாக இருப்பதால், பெண்கள் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவறாமல் டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டிருப்பதால், மீண்டும் கருத்தரித்த பின் பெண்கள் மனதளவில் தைரியமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மன அழுத்தத்திற்கு உட்பட்டு மீண்டும் கருச்சிதைவை சந்திக்கக்கூடும். குறிப்பாக இப்போது கணவன்மார்கள், மனைவிக்கு மிகுந்த ஆறுதலாக இருக்க வேண்டும்.
* மற்றொரு முக்கியமான குறிப்பு என்னவென்றால், காப்ஃபைன் உள்ள உணவுப்பொருட்களை அறவே தொடக்கூடாது. மேலும் எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் தேவையில்லாமல் எடுத்துக் கொள்ளக்கூடாது.
* ஒருவேளை இக்காலத்தில் காய்ச்சல் வந்தால், அப்போது இயற்கை வைத்தியங்களைத் தவிர, வேறு எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் தொடவேக்கூடாது.
* குறிப்பாக எந்த ஒரு பிரச்சனை என்றாலும் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். பின் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எப்போதும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறெல்லாம் நடந்து வந்தால், நிச்சயம் நல்ல அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.
இந்த பிக் பாஸ் கமல் பிளானை நம்ம அரசியல்வாதிங்களே புரிஞ்சிக்கலை!
July 18, 2017வெள்ளித்திரையிலிருந்து சின்னத் திரைக்கு வந்திருக்கும் நடிகர் கமல் விஸ்வரூபம் பட பஞ்சாயத்திற்கு பின்னர் தமிழக அரசியல்களத்தின் மைய புள்ளியாக ...
அதே சமயம் அரசியலுக்கு வந்து விட்டு ஊழல் பற்றி பேசு என்கிறார் அமைச்சர் ஒருவர் எங்களை விமர்சிக்க கமலுக்கு தகுதியில்லை என்று ஒரு அமைச்சர் பேசுகிறார்.BJP மாநில தலைவர் தமிழிசையோ ஜெயலலிதா இருந்த போது கமல் ஏன் ஊழல் பற்றி பேசவில்லை என கேள்வி எழுப்பி குட்டையை குழப்புகிறார். இதையெல்லாம் கவனிக்கும் போது இவர்கள் அனைவரும் அரசியலில் மட்டுமல்ல சினிமாக்காரர்களை அனுமானிப்பதிலும் தப்புக் கணக்குதான் போடுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
கமலஹாசன் அரசியல் விமர்சனம் செய்பவர்தான், தற்போது அவர் பேசிய பேசி வருகிற அரசியல் விமர்சனங்கள் தமிழக மக்கள் நலன் சார்ந்தது அல்ல. நம் தமிழக மக்கள் விலைவாசி உயர்வு, குடி தண்ணீர், டெல்டா விவசாயம் பொய்த்து போனது என மக்களின் அடிப்படையான ஜீவாதார பிரச்சினைகள் பற்றி பேசவோ, நீட் தேர்வை ரத்து செய்யவோ உரிமைக் குரல் எழுப்பவில்லை. மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்ததால், மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதைக் கண்டித்து ட்விட் போட வில்லை..
தனியார் தொலைக்காட்சி ஒன்று வியாபார நோக்குடன் நடத்தி வரும் நிகழ்ச்சியின் தலைமை பொறுப்பு வகிக்கும் கமலஹாசன் தனது நிகழ்ச்சியை பிரபலப்படுத்தும் பொறுப்பும் கடமையும் அவருக்கு உண்டு. அதற்கு கமலஹாசன் எடுத்த ஆயுதம்தான் இந்த தமிழக அரசியல்.
தற்போதைய ஸ்டராங்காக இல்லாத அரசின் ஊழல்களை பற்றி பேசினால் எதிர்ப்புகள் அதிகமாகும். அப்போதுதான் நடத்தும் Cameshow பிரபலமடைந்து விடும் என்ற அவரின் நம்பிக்கை வீண் போகவில்ல. அத்துடன் நடிகரின் அரசியல் விமர்சனங் களுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் தாங்களும் பிரபலமடையலாம் என்ற அவர்களின் கணக்கு தவறாகவில்லை.
மொத்தத்தில் தமிழக மக்களை பாதிக்கும் உண்மையான பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளி, மக்களை திசை திருப்ப கமலை தமிழக அரசு பயன்படுத்திக் கொண்டது போல,தனதுநிகழ்ச்சியை பிரபலப்படுத்த அரசியல் சர்ச்சைகளை பயன்படுத்தி பன்னாட்டு கம்பெனிக்கு பணம் சம்பாதித்து கொடுக்கும் வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளார் – கமலஹாசன் இந்த சூட்சமம் தெரியாமல் – புரியாமல் தமிழக அரசியல்வாதிகள் கமல்ஹாசனுக்கு ஆதரவு குரல் எழுப்பியது வேடிக்கையானதே.
ஷாப்பிங் மால்களில் ‘ஹஸ்பண்ட் ரெஸ்ட் ரூம்’ – சீனா அசத்தல்!
July 18, 2017ஒரு காதலியை ஷாப்பிங் அழைத்து செல்லும் ஆடவன் அதே பெண் தன் மனைவியான பிறகு ஷாப்பிங் அழைத்து செல்லும் போது மட்டும் ஒவ்வொரு கணவர்களும் முகத்த...
ஆம்.. ஆண்களின் இந்த ‘தனிமை’ கஷ்டத்தை உணர்ந்துதான் சீனா ஷாங்காயில் உள்ள ‘குளோபல் ஹார்பர் மால்’ என்ற வர்த்தக நிறுவனம் போக்கும் வகையில் ஒரு ஸ்பெஷலான் தனி கண்ணாடி அறைகளை அமைத்து அசத்தி உள்ளது. ‘கணவர்கள் ஓய்வு பூத்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த தனி கண்ணாடி அறையில், பெண்கள் ஷாப்பிங் செய்யும் நேரத்தில் கணவர்கள் பொழுதை போக்கலாம். கண்ணாடி அறையில் ‘டிவி’ வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் பிடித்த சேனல்களை வைத்து நிகழ்ச்சிகளை பார்த்து மகிழலாம்.
மேலும் கண்ணாடி அறையின் ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதியில் தேவைப்பட்டால் மசாஜ் வசதியையும் ஏற்படுத்தி கொள்ளலாம். படுக்கையில் படுத்து கொண்டால், அதுவே உடலை மசாஜ் செய்து விடும். முதல் கட்டமாக 4 ஷாப்பிங்கள் மால்களில் கணவர்களுக்கான இந்த பிரத்யேக ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. தலா ரூ.4 லட்சம் செலவில் இவை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இலவசமாக இந்த மையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். பின்னர் இந்த மையத்தை பயன்படுத்துவதற்கு மொபைல் ஆப் மூலமாக சிறு தொகை செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வசதி தற்போது ஷாங்காய் நகரில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், அனைத்து கடைகளிலும் தனிமை கணவர்களுக்கு சிறப்பு அறைகளை ஏற்படுத்த பல்வேறு நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
