மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன மினி விமர்சனம்

கரு : சாலையில் சென்ற பெண்ணிடம், பைக்கில் வந்த மர்ம நபர்கள் செயின் பறிப்பு, என்ற செய்தியை நாம் தினந்தோறும் படிக்கிறோம். அந்த சம்பவத்தில் ஏதோ...

கரு : சாலையில் சென்ற பெண்ணிடம், பைக்கில் வந்த மர்ம நபர்கள் செயின் பறிப்பு, என்ற செய்தியை நாம் தினந்தோறும் படிக்கிறோம். அந்த சம்பவத்தில் ஏதோ தங்கம் மட்டும் தான் திருடப்பட்டுவிட்டதாக நாம் நினைக்கிறோம். ஆனால், சில சமயங்களில் பல பெண்களின் உயிர் பறிபோவதோடு, அதனால் பலர் பலவிதத்தில் பாதிக்கப்படுகிறார்கள்.... அது எப்படி ? இதற்கு என்ன தீர்வு ? என்பது தான் இப்படத்தின் கரு.

கதை : சரண்யா பொன்வண்ணனின் ஒரே மகனானநாயகர் துருவா ., ஒரு கேஸ்ஏஜென்சியின்சிலிண்டர் 'டெலிவரிபாய் '. அழகிய டி.வி.காம்பயர் அஞ்சனா பிரேமை பார்த்த மாத்திரத்திலேயே துருவ்வின் அம்மாசரண்யாவுக்கு பிடித்துப் போக ., அவரை விடா பிடியாக பேசி முடித்து., திருமணம் செய்து வைக்கிறார்.

திருமணமான கொஞ்ச நாளிலேயே ., மாமியாரும் , மருமகளும் கடைவீதியில் ஷாப்பிங் முடித்து வீடு திரும்பிய போது அஞ்சனா கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை "பைக்"கில் வந்த செயின் பறிப்பு திருடர்கள் பிடித்து இழுக்க ., அதில் அஞ்சனா பிரேமின் தாலி சங்கிலி அவர் கழுத்தை அறுத்து அவர் உயிர் பறிபோகிறது. மருமகளின் செயினை பறித்தவர்களை துரத்திச் சென்ற சரண்யாவும் திருடர்களால் தாக்கப்பட்டுசீரியஸ் கண்டீஷ னில்மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். சிட்டியை உ லுக்கிய இந்த சம்பவத்திற்கு பின்பும் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்கிறது .

இந்த செயின் பறிப்பு வழக்குகளை விசாரிக்க துணிவு மிக்க காவல் அதிகாரி சக்கரவர்த்தி நியமிக்கப்படுகிறார். அவர் செயின் பறிப்பு சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட துருவாவை அழைத்து ஆறுதல் கூறி ., செயின் பறிப்பு கும்பலுக்கு முடிவு கட்டஅவரது ஒத்துழைப்பை கேட்கிறார்.
சக்ரவர்த்தி என்ன மாதிரி ஒத்துழைப்பு கேட்டார் ? துருவா ஒத்துழைத்தாரா ? செயின் பறிப்பு கும்பலுக்கு முடிவு கட்டப்பட்டதா ..? சரண்யா பிழைத்தாரா ..? ஹீரோ துருவின் கடந்த கால மனைவியாகஅஞ்சனா பிரேமின் கேரக்டர் ஒ.கே .இதில் "பிக்பாஸ்"ஐஸ்வர்யா தத்தா கேரக்டர் தான் என்ன ..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும் விடை சொல்கிறது ''மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’' மீதிக் கதை மொத்தமும்!

காட்சிப்படுத்தல் : வி. மதியழகன் - ஆர்.ரம்யா இருவரதுஎட்ரிக்டா எண்டர்டெயின்மென்ட் & ,மாஸ்எண்டர்டெயின்மென்ட்தயாரிப்பில், ஆர்.ராகேஷ் எழுத்து , இயக்கத்தில் புதுமுகம் துருவா - "பிக்பாஸ்" ஐஸ்வர்யா தத்தா , அஞ்சனா பிரேம், சக்கரவர்த்தி ,சரண்யா பொன்வண்ணன் ஆகியோர்நடிக்க., "செயின் சினாசிங் கேங் "எனப்படும் பெண்களிடம் சங்கிலி பறிக்கும் கும்பல் பற்றிய திக் திக் கதையம்சத்துடன் வந்திருக்கும் படம் தான்
"மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன."

கதாநாயகர் : புதுமுக நாயகர்துருவா நல்ல வாட்டசாட்டமாக ஆக்‌ஷன் ஹீரோவாக சங்கிலி பறிக்கும் திருடர்களுக்கே சவாலான திருடராக அறிமுகமாகி அசத்தலாகவலம் வருகிறார்.

செயின் பறிக்கும் கூட்டத்தில் ஒருவராக அவர் வலம் வருவது, வெகுளித்தனமான அம்மாவுக்கு பாசமான பிள்ளையாக இருப்பது , என்று தனது கதாபாத்திரத்தை ரொம்பவே நிறைவாக துருவா செய்திருக்கிறார்.

கதாநாயகியர் :இரண்டு நாயகியரில் ஒருவரான ".பிக் பாஸ்" ஐஸ்வர்யா தத்தா ஆரம்பத்தில் அதிரடியாக அறிமுகமானலும், ஹீரோவின் பிளாஷ்பேக்கை ஓபன் செய்யும் கருவியாகவே அவர் பயன்பட்டிருக்கிறார். பிறகு திடீரென்று வேறு ஒரு பரிணாமத்தில் போலீஸாகக்ளைமாக்ஸில் வந்து நிற்பது அவ்வளவாக எடுபடவில்லை.

அதே நேரம் மற்றொரு நாயகியாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடிக்கும் பெண்ணாக வரும் அஞ்சனா பிரேம் ., கொஞ்ச நேரமேகுறைவான காட்சிகளில் ...வந்தாலும் ரசிகர்கள் மனதில் நின்றுவிடுகிறார்.பேஷ் , பேஷ் .

பிற நட்சத்திரங்கள் :பல படங்களில் பாசமான அம்மாவாக பார்த்து வந்த சரண்யா பொண்வன்னனுக்கு இதிலும்அதே ரோல் தான் என்றாலும், அதில் சற்று வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். சக்ரவர்த்தி , ராதாரவி, அருள்தாஸ், மைம் கோபி, . . ஆகியோரும் எப்போதும் போல தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ப பக்காவாகநடித்திருக்கிறார்கள். மனோபாலா சிரிக்க வைக்க முயன்று கடித்திருக்கிறார்.

பலம் : சினிமா என்பது பொழுது போக்கு அம்சமாக இருந்தாலும், அவ்வபோது சமூக அக்கறையோடும் சில படங்கள் வருவதுண்டு. அந்த வகையிலான ஒரு படம் தான் இந்த ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ என்பது இப்படத்திற்கு பெரும் பலம்.

பலவீனம் : ''மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?" எனும் டைட்டில் ஏதோ காதல் பட டைட்டில் மாதிரி இருப்பது , இப்படத்திற்கு பெரும் பலவீனம்.

தொழில்நுட்பகலைஞர்கள் : பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவில் பைக் சேசிங் காட்சிகள் மிரட்டல், படத்தில் ஏகப்பட்ட பைக் சேசிங் காட்சிகள் வந்தாலும், ஒவ்வொன்றையும் ஒரு விதத்தில் படமாக்கியிருக்கிறார். அச்சு ராஜாமணியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதைக்கு ஏற்ப ஜீவனோடுபயணித்திருக்கிறது

இயக்கம் :சாலையில் சென்ற பெண்ணிடம், பைக்கில் வந்த மர்ம நபர்கள் செயின் பறிப்பு, என்ற செய்தியை நாம் தினந்தோறும் படிக்கிறோம். அந்த சம்பவத்தில் ஏதோ தங்கம் மட்டும் தான் திருடப்பட்டுவிட்டதாக நாம் நினைக்கிறோம். ஆனால், சில சமயங்களில் பல பெண்களின் உயிர் பறிபோவதோடு, அதனால் பலர் பலவிதத்தில் பாதிக்கப்படுகிறார்கள்.... அது எப்படி ? என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்லியிருப்பதோடு, செண்டிமெண்ட், காதல் என்று கமர்ஷியலாகவும் சொல்லியிருக்கிறார் இப்பட இயக்குநர் ஆர்.ராகேஷ்.

பொதுவாக இதுபோன்ற படங்களில் வில்லன்கள் தான் செயின் பறிப்பு திருடர்களாக இருப்பார்கள், ஆனால் இந்த படத்தில் ஹீரோவே செயின் திருடர்களின் கூட்டத்தில் ஒருவராக இருக்க, ஹீரோவா! ஏன்? என்ற ஆச்சரியம் கலந்த கேள்வி படம் பார்க்கும் அனைவருக்கும் ஆரம்பத்திலேயே ஏற்படுத்திவிடும் . , பிறகு அதற்கான காரணத்தை இயக்குநர் சஸ்பென்ஸோடு சொல்லியுள்ள விதம்தான் இப்படத்தின் பாராட்டிற்குரிய அம்சமாகும்.

அதே மாதிரி ,"இந்த உலகத்துல முதல்ல வந்தவன் திருடன் தான் அவன கண்டுபிடிக்க ரெண்டாவதா வந்தவன் தான் போலீஸ் ... " ,"பொருள் அடிக்கிறவன் பொண்ணுங்களை பார்க்கக் கூடாது...." உள்ளிட்ட வசனங்கள் மூலமும் திரும்பி பார்க்க வைத்திருக்கும் இயக்குநர் ராகேஷ்., செயின் கொள்ளை சம்பவத்தை பற்றி படம் எடுத்தாலும், அதை பெண்கள் சார்பில் இருந்துதிரைக்கதை அமைத்திருக்கிறார்.

”பெண்களுக்கு பிடித்தமான விஷயமே தங்கம் தான், ஆனால் அந்த தங்கத்தின் மீதே அவர்களுக்கு பயம் ஏற்பட வைத்துவிட்டார்களே” என்று பெண்களின் நிலையில் இருந்து இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் கையாண்டிருக்கும் இயக்குநர் ராகேஷ், செயின் பறிப்பு குற்றத்தை பொருத்தவரை வழிப்பறி மற்றும் திருட்டு வழக்காக பதிவு செய்யும் காவல் துறை, அதை கொலை முயற்சியாக பதிவு செய்ய வேண்டும் என்ற கருத்தை ரொம்ப அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, அவர்களுக்கு எந்த மாதிரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதையும் தைரியமாக சொல்லியிருக்கிறார்.

இயக்குநர் ராகேஷ் சொல்வது போல, செயின் பறிப்பு திருடர்களுக்கு காவல்துறை தண்டனை கொடுத்தால், நிச்சயம் இந்த குற்றங்கள் நடைபெறாது என்பது உறுதி.

மற்றபடி .,படத்தில் ஒருசில இடங்களில் சில வாஜிக் குறைகள் இருந்தாலும், சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகவும், மக்களை குறிப்பாக பெண்களை உஷார்ப்படுத்தும் பாடமாகவும் இப்படம் இருக்கிறது... என் பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

மொத்தத்தில்., ''மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' - 'திரையரங்கம் சென்று தாராளமாக பார்க்கலாம் என்பதில்சந்தேகம் வேண்டாம் என்ன?!

மேலும் பல...

0 comments

Blog Archive