மீண்டும் கர்ப்பமான பிரபல நடிகை ரம்பா எடுத்த அதிரடி முடிவு!
June 02, 2018நடிகை ரம்பா அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து ஒரு நேரத்தில் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தார். தற்போது அவர் குடும்பத...
கனடா நாட்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். அண்மையில் அவர் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் என தகவல்கள் பரவியது.
பின் அவரும் விரைவில் மூன்றாவது குழந்தைக்கு அம்மாவாக போகிறேன் என கூறியிருந்தார். இந்நிலையில் அவர் ஏற்கனவே தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டாராம்.
ஆனால் இந்த பாடல் காட்சி பல மாதங்களாக எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் படக்குழு மீண்டும் அவரை அணுகியிருக்கிறது. கர்ப்பமாக இருப்பதால் முடியாது என கூறி ரம்பா நடிக்க மறுத்து விட்டாராம்.
சன் டிவி எடுத்து வைக்கும் அடுத்தக்கட்டம், ரசிகர்கள் ஆச்சரியம்
June 01, 2018ஒரு காலத்தில் அரசாங்க சேனலை தாண்டி வேறு ஏதும் மக்களுக்கு தெரியாது. ஆனால், தற்போது எந்த சேனலை பார்ப்பது என்று மக்கள் குழம்பும் நிலையில் உள்ள...
அந்த அளவிற்கு பல சேனல்கள் வந்துவிட்டது, ஆனால், இன்றும் இந்தியளவில் நம்பர் 1 இடத்தில் இருப்பது சன் டிவி தான்.
சன் தொலைக்காட்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியா முழுவதும் ஆட்சி செய்து வருகின்றது.
தற்போது ஒரு படி மேலே சென்று வட இந்தியாவிலும் கால் பதிக்கவுள்ளது, ஆம், விரைவில் சன் தொலைக்காட்சி, மராத்தி, பெங்காலி சேனல் தொடங்கவும் முயற்சி செய்து வருகின்றதாம்.
சன் டிவியின் வளர்ச்சியை கண்டு ரசிகர்கள் அனைவருக்குமே ஆச்சரியம் தான்
அந்த விஷயத்தில் சச்சின் இல்லை தோனி தான் என் சாய்ஸ், அரவிந்த்சாமி அப்படி கூறியது ஏன்?
May 31, 2018அரவிந்த்சாமி நல்ல நடிகர் என்பதை தாண்டி பண்முக திறமை கொண்டவர். இவர் நடிப்பில் விரைவில் சதுரங்கவேட்டை படம் திரைக்கு வரவுள்ளது. அதுமட்டுமின்...
அதுமட்டுமின்றி மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் படத்திலும் நடித்துள்ளார், இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்தார்.
இதில் இவரிடம் கிரிக்கெட் பற்றி கேட்க, அதில் தன் ஆல்டைம் பேவரட் கிரிக்கெட் 11 வீரர்களை கூறினார்.
இதில் சச்சின், கவாஸ்கர், தோனி, ப்ராட்மேன் என 11 பேர் இருக்க, ஒவ்வொருத்தரும் ஏன் என்ற விளக்கத்தையும் கூறினார்.
இந்த 11 பேரில் கண்டிப்பாக தோனியை தான் கேப்டன் ஆக்குவேன் என்று கூறினார், ஏனெனில் சச்சின், கவாஸ்கர் பலரும் திறமையான பேட்ஸ்மேனே தவிர, சிறந்த கேப்டனாக நிரூபிக்கவில்லை.
அதே நேரத்தில் இத்தனை ஜாம்பவான்களை கொண்டு செல்ல ஈகோ இல்லாத ஒரு ஆள் தேவை, அவர் தான் தோனி என்று விளக்கம் கொடுத்தார்.
துவைக்காத தலையணையால் இளம்பெண்ணிற்கு நிகழ்ந்த துயரம்.... மக்களே உஷார்!
May 30, 2018சீனாவை சேர்ந்த பெண்மணி ஒருவரின் கண் இமையில் 100 ஒட்டுண்ணிகள் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிச்சியடைந்துள்ளனர். Ms Xu என்பவர் கடந்த இர...
Ms Xu என்பவர் கடந்த இரண்டு வருடங்களாக கண் அரிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரது கண்களும் சிவப்பு நிறமாக மாறியுள்ளது.
இதனைத்தொடர்ந்து மருத்துவரிடம் சென்றுள்ளார், இவரது கண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் கண் இமையில் 100 ஓட்டுண்ணிகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர், கண்களில் ஒட்டுண்ணி பாதிப்பு ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் இந்த அளவுக்கு எண்ணிக்கை அதிகரிக்காது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்பெண்மணி கடந்த 5 வருடங்களாக தான் பயன்படுத்தும் தலையணையை துவைக்காமல் வைத்திருந்துள்ளார். துவைக்காமல் தலையணையை பயன்படுத்தியதால் கண்களில் அலர்ஜி மற்றும் வெண்படல பாதிப்பால் ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
இதற்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் விரைவில் குணமாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
நாளை மறுநாள் ரிலீஸ் ஆகும் ஆண்டனி படத்தில் அப்படி என்ன இருக்கிறது? குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள்
May 30, 2018தமிழ் சினிமாவில் வாரவாரம் படங்களுக்கு பஞ்சமில்லை. தற்போது INDIA'S FIRST CLAUSTROPHOBIC THRILLER படமாக ஆண்டனி நாளை மறுநாள் ஜூன் 1 ல் ரில...
முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எடுக்கப்படும் இப்படத்திற்கு வரவேற்பு குவிந்துள்ளது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை வாழ்த்தி வருகிறார்கள்.
நடிகர் ஜி.வி.பிரகாஷ் ஆண்டனி திரைப்படத்தின் பாடல்கள் மிகவும் அருமை. சிவாத்மிகா இசையை தமிழ் சினிமா வரவேற்கிறது என கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புது முயற்சி புது சிந்தனை ஆண்டனி படத்திற்கு என் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா ஆண்டனி தமிழ் சினிமாவின் சிறந்த படம் என படத்தை பார்த்துவிட்டு வாழ்த்தியுள்ளார்.
`நடிகனான என்னைப் பார்த்தால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்' - தூத்துக்குடி கிளம்பிய ரஜினிகாந்த்!
May 29, 2018'பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக தூத்துக்குடி செல்கிறேன்' என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு ...
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. எனினும், உயிரைத் துச்சமென நினைத்து நடத்திய போராட்டத்தின் பயனாக, தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்குத் தடை விதித்து தமிழக அரசு சீல்வைத்தது. இந்தத் தடைகுறித்து அரசியல் கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிவந்தாலும், இதன்மூலம் தூத்துக்குடி மக்கள் ஓரளவுக்கு நிம்மதியடைந்துள்ளனர். மேலும், இதனால் தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிவருகிறது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மக்களை பல்வேறு தலைவர்களும், அரசு சார்பில் துணை முதல்வரும் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக இன்று தூத்துக்குடி கிளம்பினார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``துப்பாக்கிச் சூட்டில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக தூத்துக்குடி செல்கிறேன். ஆறுதல் கூறினால் எனக்கு மகிழ்ச்சி. நடிகரான என்னைப் பார்த்தால், இந்த நெருக்கடியான சூழலில் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என நம்புகிறேன். சட்டப்பேரவை கூட்டத்தொடரை தி.மு.க புறக்கணித்தது பற்றிப் பேச விரும்பவில்லை. தி.மு.க-வை அ.தி.மு.க-வும், அ.தி.மு.க-வை தி.மு.க-வும் விமர்சிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. எனினும், பழைய சம்பவங்களைப் பேச வேண்டாம்; அதனால் பயனில்லை. துப்பாக்கிச் சூடு குறித்து மனித உரிமை கமிஷன் விசாரித்துவருகிறது. அதில் உண்மை தெரியவரும்" என்றார்.