`ஆர்வக்கோளாறு ஆபத்தை ஏற்படுத்தும்’ - கமலுக்கு ராமதாஸ் அட்வைஸ்
June 04, 2018குமாரசாமி - கமல் சந்திப்பு, தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், கர்நாடக முதல்வர...
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், கர்நாடக முதல்வர் குமாரசாமியை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இருவரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கமல், “குறுவை சாகுபடி தொடங்குவதால் காவிரியில் நீர் திறக்க நினைவூட்ட வந்தேன். இந்தச் சந்திப்பு கூட்டணிக்கானதோ திரைப்படம் தொடர்பானதோ இல்லை முற்றிலும் மக்களுக்கானது” என்றார்.
கமலின் இந்த நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் இருவேறான விமர்சனங்கள் எழுந்துள்ளன. `காவிரி விவகாரம் குறித்து கமல் கர்நாடக முதல்வரைச் சந்தித்துப் பேசியது வரவேற்கத்தக்கது’ என்று ஒரு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். `கமல் விளம்பரத்துக்காகவே இவ்வாறு செய்கிறார்’ என்று மற்றொரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
கமல் - குமாரசாமி சந்திப்பு குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில், ``கர்நாடக முதல்வரை கமல்ஹாசன் இன்று சந்தித்து காவிரி சிக்கல் குறித்து பேச்சு நடத்துகிறார். காவிரி சிக்கலில் பேச்சு கூடாது எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆர்வக்கோளாறில் செய்யப்படும் சில நடவடிக்கைகள் ஆபத்தை ஏற்படுத்திவிடும்” எனத் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கமல் உடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, ``கமலை சந்தித்ததில் மகிழ்ச்சி. தமிழ்நாடு - கர்நாடகா இடையே பரஸ்பர பிணைப்பை மேம்படுத்துவதை நோக்கிப் பயணிக்க முடிவு செய்துள்ளோம். காவிரி பிரச்னை உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணப்படும். இரு மாநிலங்களுக்கு இடையே ஒரு பாலமாகக் கமல் செயல்பட வேண்டும் என்று அவரிடம் நான் கேட்டுக்கொண்டேன். என் கோரிக்கையை அவர் அன்பாக ஏற்றுக்கொண்டார்” என்று பதிவிட்டுள்ளார்.
தீரன் படத்திற்கு விருது இல்லையா?- ஷாக்கான இயக்குனர்
June 04, 2018தமிழ் சினிமாவில் கடந்த வருடம் நிறைய படங்கள் மக்களிடம் வெற்றிபெற்றன. அதில் நிஜ கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தீரன். கார்த்தி-ராகுல்...
அதில் நிஜ கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தீரன். கார்த்தி-ராகுல் ப்ரீத் சிங் நடித்திருந்த இப்படம் போலீஸ் அதிகாரிகளை பற்றிய ஒரு உண்மைக் கதை. படம் வெளியானது மக்கள் கதையை அப்படி கொண்டாடினார்கள்.
ஆனால் இந்த படத்திற்கு நேற்று நடந்த விஜய் விருதில் ஒரு விருது கூட இல்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தம் தான்.
டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் தன்னுடைய டுவிட்டரில் என்னது தீரன் படத்திற்கு விருது இல்லையா என்று தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
விஜய், அஜித்துக்கு கூட இல்லை, விஜய் விருது விழாவில் ஒரே ஒரு பிரபலத்துக்கு மட்டும் கிடைத்த அதிக வரவேற்பு
June 04, 2018விருது விழாக்கள் எப்போதுமே ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும். அப்படி ஒரு விருது என்றால் விஜய் அவார்ட்ஸ் தான். நேற்று நடைபெற...
நேற்று நடைபெற்ற இந்த விருது விழா மீது ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் விழா குறித்து ஒரு ஸ்பெஷல் விஷயம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதாவது நேற்று வந்த பிரபலங்களில் ரசிகர்கள் நடிகர் விஜய் சேதுபதிக்கு தான் அதிகம் வரவேற்பு கொடுத்தார்களாம். மக்கள் செல்வன் என்ற பெயருக்கு ஏற்ப அந்த மேடையில் ஜொலித்திருக்கிறார் விஜய் சேதுபதி.
இவ்வளவு வரவேற்பு விஜய், அஜித்துக்கு கூட இல்லை என்கின்றனர் நேரில் நிகழ்ச்சியை பார்த்தவர்கள்.
விஜய் அவார்ட்ஸில் சூப்பர் தகவலை வெளியே கூறிய கார்த்தி, ரசிகர்கள் கொண்டாட்டம்
June 04, 201810வது விஜய் அவார்ட்ஸ் பிரமாண்டமாக நேற்று நடந்து முடிந்தது. இதில் பெரிய நடிகர்கள் பலரும் கலந்துக்கொள்ளவில்லை என்றாலும், வளர்ந்து வரும் பிரபல...
அந்த வகையில் நடிகர் கார்த்தி தான் சிறந்த நடிகை விருதை நயன்தாராவிற்கு கொடுத்தார், அதோடு, ஒரு சூப்பர் தகவலையும் மேடையில் கூறினார்.
ஆம், கார்த்தி நடித்துவரும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சூர்யா ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம்.
இதை மேடையில் கார்த்தி சொல்ல அரங்கமே அதிர்ந்தது, கடைக்குட்டி சிங்கம் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருட விஜய் அவார்ட்ஸ் விருதில் ஸ்பெஷல் நடனம் ஆடப்போகும் பிரபலங்கள் விவரம் இதோ- ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் தான்
June 02, 2018ஒரே ஒரு விருது விழாவிற்காக ஒட்டுமொத்த தமிழ் மக்கள் வெயிட்டிங். வரும் ஜுன் 3ம் தேதி பிரபலங்கள் பங்குபெற படு பயங்கரமாக நிகழ்ச்சி நடக்க இருக்க...
2 வருடங்கள் கழித்து இவ்விருது விழா நடக்க இருப்பதால் கண்டிப்பாக பிரம்மாண்டமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு. இந்த நேரத்தில் விருது விழாவில் யார் யார் நடனம் ஆட இருக்கிறார்கள் என்ற விவரத்தை பார்ப்போம்.
அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரின் கவனத்திற்கு வந்த நடிகர் ஹரிஷ் கல்யாண், சாய் தன்ஷிகா, சயீஷா போன்ற பிரபலங்கள் தான் நடனம் ஆடுகிறார்கள்.
மீண்டும் கர்ப்பமான பிரபல நடிகை ரம்பா எடுத்த அதிரடி முடிவு!
June 02, 2018நடிகை ரம்பா அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து ஒரு நேரத்தில் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தார். தற்போது அவர் குடும்பத...
கனடா நாட்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். அண்மையில் அவர் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் என தகவல்கள் பரவியது.
பின் அவரும் விரைவில் மூன்றாவது குழந்தைக்கு அம்மாவாக போகிறேன் என கூறியிருந்தார். இந்நிலையில் அவர் ஏற்கனவே தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டாராம்.
ஆனால் இந்த பாடல் காட்சி பல மாதங்களாக எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் படக்குழு மீண்டும் அவரை அணுகியிருக்கிறது. கர்ப்பமாக இருப்பதால் முடியாது என கூறி ரம்பா நடிக்க மறுத்து விட்டாராம்.