டிராபிக் ராமசாமி - திரை விமர்சனம்
June 22, 2018தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என வாய்ப்பேச்சோடு நிற்காமல் களத்தில் இறங்கி வேலை செய்பவரான டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை வைத்து அவரின் பெ...
கதைக்களம்:
ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆரம்பிக்கிறது படம். அந்த புத்தகத்தை நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் அமர்ந்து படித்து அவர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை நினைத்து பார்ப்பது போல விரிகிறது கதை.
சமூகத்தில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளும் போலீஸ், அரசியல்வாதிகள் என ஒருவரையும் விட்டுவைக்காமல் கோர்ட்டுக்கு இழுத்து மக்களுக்கு நியாயம் கிடைக்க போராடுகிறார். அதனால் அவரை தீர்த்துக்கட்ட நினைக்கும் எதிரிகளிடமிருந்து சில அடி-உதைகளை பரிசாக பெறுகிறார்.
இருப்பினும் சோர்ந்துவிடாமல், அரசால் தடை செய்யப்பட்டும் இன்னும் சட்டவிரோதமாக பல இடங்களில் ஓடிக்கொண்டிருக்கும் மீன் பாடி வண்டிகள் மற்றும் அதனால் ஏற்படும் விபத்துகளை தடுக்க ஒரு வழக்கை தொடுக்கிறார்.
அதில் பல பெரிய அரசியல் தலைகள் சிக்க, அந்த கேசில் ராமசாமி ஜெயித்தார் இல்லையா என்பது தான் கதை.
படத்தை பற்றிய அலசல்
டிராபிக் ராமசாமி என்றால் வெறும் போஸ்டர்/பேனர்களை கிழிப்பவர், பொதுநல வழக்கு தொடர்பவர், அடிக்கடி தற்கொலை மிரட்டல் விட்டு போராட்டம் நடத்துபவர் என்பதோடு மட்டும் நில்லாமல் அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், நியாயத்திற்காக போராடியதால் அவர் அனுபவித்த துன்பங்கள் என அனைத்தையும் திரையில் கொண்டுவந்துள்ளனர்.
ஆனால் படம் கமெர்சியலாக இருக்கவேண்டும் என்பதற்காக சேர்க்கப்பட்ட சில கதாப்பாத்திரங்கள், சீன்கள் - பார்ப்பவர்களுக்கு சலிப்பை தான் எற்படுத்துகின்றன.
வில்லன்களாக வரும் இமான் அண்ணாச்சி, மோகன் ராமன் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களும் அழுத்தமாக இல்லாதது படத்திற்கு பின்னடைவு. சில கோர்ட் சீன்கள் ஏதோ காமெடி ஷோ போலவே இருந்தன.
அங்கும் இங்கும் அரசியல் கருத்துக்களை சேர்க்க முற்பட்ட இயக்குனரால் இந்த படம் ஒரு முழுமையான வாழ்க்கை வரலாற்று படமாக இல்லாமல் போய்விட்டது என்றும் சொல்லலாம்.
கிளாப்ஸ்:
- டிராபிக் ராமசாமியின் ரோலில் கச்சிதமாக பொருந்தி நடித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர்.
பல்ப்ஸ்:
- எதார்த்தமாக இல்லாமல் போன சீன்கள்.
- அழுத்தம் இல்லாத நெகட்டிவ் கதாபாத்திரங்கள்.
டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையையும் போராட்டங்களையும் இன்னும் சிறப்பாகவே பதிவு செய்திருக்கலாம்.
அஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர்! ஆனால் அவர் ஷங்கர் இல்லை!
June 20, 2018அஜீத் விஜய்யோட அடுத்தப்படம் என்னப்பா…? என்று சோஷியல் மீடியாவில் துழாவிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு, ஒரு க்ளுவும் கிடைக...
இந்த நேரத்தில்தான் அந்த பொல்லாத தகவல். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய வினோத், அஜீத்திற்கு ஒரு கதை சொல்லி கவிழ்த்தாரல்லவா? அந்தப்படத்தைக் கூட போனிக்கபூர் தயாரிப்பதாக இருந்ததே… அங்குதான் புதிய திருப்பம்.
திடீரென வினோத்தை அழைத்தாராம் விஜய். எனக்கும் ஒரு கதை சொல்லுங்க என்று கேட்க, புல்லரிக்கும்படி இவருக்கும் ஒரு கதை சொல்லியிருக்கிறார் வினோத். இந்தப்படம் பண்றோம். அதுவும் உடனே… என்று விஜய் வாக்குறுதி கொடுக்க… நிலைமை தர்மசங்கடம். முதலில் கதை கேட்டு ஓ.கே சொன்ன அஜீத்தா? உடனே தயாராகுங்க என்று கேட்கிற விஜய்யா? தடுமாறிப் போன வினோத், எதுக்கும் அஜீத் சார்ட்ட ஒரு வார்த்தை கேட்டுக்குறேன் என்றாராம்.
“ஒரு டென்ஷனும் இல்ல. முதல்ல விஜய் படத்தை பண்ணிட்டு வாங்க. நான் வெயிட் பண்றேன்” என்றாராம் அஜீத்.
அடிச்சுக்குற ரசிகர்களே… இந்த பெருந்தன்மையை கவனிச்சீங்களா?
இரும்புத்திரை விஷால் திரைப்பயணத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது- இத்தனை கோடி வசூலா!
June 20, 2018விஷால் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன் வெளிவந்த படம் இரும்புத்திரை. இப்படத்தில் சமந்தா, ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ் என பல...
இப்படம் தமிழில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது, தமிழில் மட்டும் இப்படம் ரூ 13 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு ஷேர் கொடுத்து சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
இதுமட்டுமின்றி தெலுங்கில் இரும்புத்திரை டப்பிங் செய்து ரிலிஸ் செய்யப்பட்டது, அங்கும் இப்படம் சுமார் ரூ 12 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து ஹிட் வரிசையில் இடம்பிடித்துள்ளது.
விஷால் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் செய்தது இரும்புத்திரை தான், அவர் திரைப்பயணத்தை இப்படம் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது.
கீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா?
June 18, 2018இயற்கை பல உன்னதங்களை நமக்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது. பல அதிசயங்களையும் நம் கண் முன்னே நமக்குப் பந்தி வைக்கிறது. இயற்கையை நுகரத் தெரிய...
இயற்கை பல உன்னதங்களை நமக்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது. பல அதிசயங்களையும் நம் கண் முன்னே நமக்குப் பந்தி வைக்கிறது. இயற்கையை நுகரத் தெரியாத, இயற்கையை இயற்கையாக விடத் தெரியாத நம்மால் இயற்கைப் பல பேரிடர்களை சந்தித்து வருகிறது. இருந்தாலும் இயற்கை ஒரு தாய் போல் இருந்து நம்மை அரவணைக்கவே செய்கிறது. பல அற்புதங்களை ஒரு கைத்தேர்ந்த மேஜிக் மேன் போல நம் கண்முன்னே அனுதினமும் நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது. இயற்கை படைத்த ஏரழிஞ்சில் மரமும் நமக்குப் பல அதிசயங்களை வெளிப்படுத்தும் ஓர் அதிசயம்தான். இந்த மரத்திலிருந்து கீழே விழும் விதைகள் தானாக நகர்ந்து போய் மரத்தில் ஏறி ஒட்டிக் கொள்ளும் அதிசயத்தை நிகழ்த்துபவை. நமது உடம்பை நீண்டகாலம் வாழ வைக்கக்கூடிய காயகற்பத்தை தரவல்லவை.கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சியின் மேற்கு பகுதியில் தொடங்கி கேரளாவின் பாலக்காடு வரை தெற்கு வடக்காக இந்த மரங்கள் பரவலாக வளர்கின்றன. தமிழகத்தில் ஆங்காங்கே விரல்விட்டு எண்ணும் அளவில்தான் இந்த மரங்கள் இருக்கின்றன. இந்த மரத்தின் பால் நம் உடம்பில் பட்டுவிட்டால்,அது புண்ணாகி நான்கு மாதங்கள் வரை ஆறாது என்பது ஒரு பிரச்னை. ஆனால் நன்மைகள் ஏராளம். இந்த மரத்தின் அருமை தெரிந்து, ஏரழிஞ்சில் மரத்தின் விதைகளை வாங்கி வந்து தனது தோட்டத்தில் ஊன்றி வைத்திருக்கும் கரூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி மனோகரனிடம் பேசினோம்.
விவசாயி மனோகரன்``இந்த மரத்தின் தன்மைகளை பற்றிக் கேள்விப்பட்டதும் ஆச்சர்யமாயிட்டு. இந்த ஏரழிஞ்சில் மரத்திலிருந்து கீழே தரையில் விழும் விதைகள் தானாக நகர்ந்து போய், மரத்தில் ஏறி,அடிமரத்தில் ஒட்டிக்கொள்ளுமாம். ஏற்கெனவே,கரூர் மாவட்டத்தில் உள்ள எனது வேட்டையார்பாளையம் இயற்கை வேளாண்மைத் தோட்டத்தில் ஆப்பிள்,திருவோட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்த்து வர்றேன். `ஆப்பிள், திருவோட்டு மரங்கள் கரூர் மாவட்டத்து சீதோஷ்ண நிலைக்கு வளராது'ன்னு பலரும் சொன்னாங்க. நான் வளர்த்துக் காட்டுறேன்னு சொல்லி வாங்கி வந்து நட்டு வளர்த்துக் காட்டிட்டேன். அதேபோல்தான், `இந்த ஏரழிஞ்சில் மரத்தையும் இங்கே வளர்க்க முடியாது'ன்னு சொன்னாங்க. `அதையும் நான் வளர்த்துக் காட்டுறேன்'ன்னு சொல்லி பத்து விதைகளை பழனி ஸ்ரீவாலாம்பிகை அறக்கட்டளை செம்மலர் சித்தா மையத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் செல்வராஜ்கிட்ட வாங்கிட்டு வந்து, என் தோட்டத்தில் அங்கங்கே நட்டு வைத்திருக்கிறேன். நிச்சயமா அத்தனை விதைகளையும் மரமாக்கி காட்டுவேன்" என்றார்.
ஏரழிஞ்சில் மரத்தின் தன்மைகள், மருத்துவப் பயன்கள் பற்றி சித்த மருத்துவர் செல்வராஜிடமே பேசினோம்.செல்வராஜ்
``இயற்கையின் படைப்பில் ஏரழிஞ்சில் மரம் ஒரு வரப்பிரசாதம். எனது வீடு, கன்னிவாடி, உடுமலைப்பேட்டை, விழுப்புரம் பக்கம்ன்னு நான் பார்த்த வரையில் அங்கங்கே ஒவ்வொரு மரம் இருக்கிறது. இந்த மரத்திலிருந்து மாந்திரீக மை, வசிய மை தயாரிக்கிறார்கள். மாந்திரீக நாட்டம் உடையவர்கள் இந்த மரங்களைத் தேடி அலைவார்கள். ஏனென்றால்,மாந்திரீக வேலைகளில் இந்த மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மை ராஜ மையாகப் பயன்படுத்தப்படுகிறதாம். அதோடு, இந்த மரத்தின் விதைகளோடு,இன்னும் சில விதைகளைச் சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இந்தக் காயகற்பத்தை சாப்பிட்டால், நம் உடல் நீண்டகாலம் நலமாக இருக்கும். தொடர்ந்து இந்தக் காயகற்பத்தைச் சாப்பிட்டு வந்தால், அதிக வயது வரை நாம் உயிர் வாழலாம் என்பது நம்பிக்கை. அதேபோல், இந்த மரத்தின் இலைகள், மரப்பட்டைகளை எடுத்து அரைத்துப் பவுடராக்கி உண்டு வந்தாலும், நம் உடம்பில் உள்ள சகலப் பிரச்னைகளும் நீங்கி நாம் அதிகநாள்கள் உயிர் வாழலாம். இந்த ஏரழிஞ்சில் சின்னக் கன்றாக இருக்கும்போதே மரத்தில் பழம் பழுக்கும். பெரிய சைஸ் மரமாக வளரும். இந்த மரத்தின் பழங்களை பறவைகள் தின்றுவிட்டு, கீழே போட்டால், அது மரமாகும்.
ஆனால், ஏரழிஞ்சில் மரத்திலிருந்து தானாக கீழே விழும் பழங்களில் உள்ள விதைகள் முளைக்காது. பழங்கள் கீழே விழுந்த மூன்று நாள்களில் அந்தப் பழத்தில் உள்ள விதைகள் தானாக நகர்ந்து போய், ஏரழிஞ்சில் மரத்தில் ஏறி அடிமரங்களில் ஆங்காங்கே ஒட்டிக் கொள்ளும். அது எப்படின்னா, மரத்திலிருந்து கீழே விழும் பழங்களில் உள்ள விதைகளுக்குள் குறிப்பிட்ட ஒரு பூச்சியினத்தின் புழுக்கள் உள்ளே போயிரும். அந்தப் புழு ஏரழிஞ்சில் விதைகளை நகர்த்திக் கொண்டு போய் மரத்தில் ஏற்றி, அடிமரங்களில் ஒட்ட வைக்கும். பிறகு கூட்டுப்புழுக்கள் போய் இருந்துவிட்டு, பின்பு மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் விதைகளிலிருந்து அந்தப் புழுக்கள் பூச்சிகளாக மாறி பறந்து போய்விடும். அந்த விதைகள் மட்டும் ஏரழிஞ்சில் மரங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும். நாளடவையில் அந்த விதைகள் வெறும் விதைக் கூடுகளாக மாறி, மரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும். இப்படி அதிசயங்களும், அற்புத மருத்துவக் குணங்களையும் கொண்ட இந்த ஏரழிஞ்சில் மரத்தை எல்லா இடங்களில் பயிர் செய்யவேண்டும்" என்றார்.
`சூழல் மாசுபாட்டைக் குறைக்கத் திட்டம்!' - மின்சாரப் பேருந்துகளுக்கு மாறும் கேரளப் போக்குவரத்துத் துறை சிந்து ஆர்
June 18, 2018கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கியது. கேரள மாநிலத்தில் முதன...

கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கியது.
கேரள மாநிலத்தில் முதன் முறையாக மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது. திருவனந்தபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டிலிருந்து மின்சாரப் பேருந்தை கேரளப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சோதனை முயற்சியாக இயக்கப்படும் இந்தப் பேருந்துகள் தம்பானூரிலிருந்து பட்டம் வழியாக கழக்கூட்டம் வரை இயக்கப்படுகின்றன. அடுத்ததாகக் கிழக்கேகோட்டை, கோவளம், டெக்னோபார்க், பாப்பனங்கோடு உள்ளிட்ட இடங்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. எர்ணாகுளம், கோழிக்கோடு நகரங்களிலும் சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும். சோதனை வெற்றிபெற்றால் மாநிலம் முழுவதும் 300 பேருந்துகள் இயக்கப்படும் திட்டம் இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கி.மீ.தூரம் வரை செல்லும் இந்த பஸ்ஸில் 40 இருக்கைகள் உள்ளன.
மின்சாரப் பேருந்து மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருந்தாலும் கேரளப் போக்குவரத்து விதிப்படி 80 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. ஒரு பேருந்தின் விலை ரூ. 2.50 கோடி என கே.எஸ்.ஆர்.டி.சி. தெரிவித்துள்ளது. புஷ்பேக் சீட்டுகள், கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ் கருவிகள் இந்த பஸ்ஸில் பொருத்தப்பட்டுள்ளன. இன்று முதல் 15 நாள்களுக்கு இந்தப் பேருந்து சோதனை ஓட்டமாக இயக்கப்படுகிறது
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் படத்திற்கு உலக அளவில் கிடைத்த கௌரவம்
June 18, 2018யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவில் பல தரமான படங்களுக்கு இசையமைத்தவர். இவர் தொடர்ந்து இயக்குனர் ராமுடன் கூட்டணி வைத்து வருகின்றார். இந்நில...
இந்நிலையில் இயக்குனர் ராமின் கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி படங்களுக்கு யுவன் தான் இசை, இதை தொடர்ந்து ராம் இயக்கிய பேரன்பு படத்திற்கும் யுவன் தான் இசையமைத்துள்ளார்.
இப்படம் சமீபத்தில் Shanghai international film festival-ல் திரையிடப்பட்டது, அப்போது படம் முடிந்து அனைவரும் எழுந்து நின்றி கைத்தட்டி படக்குழுவினர்களை பாராட்டினார்களாம்.